வழக்கமாக சவுக்கு மரங்களால் தடுப்புகள் ஏற்படுத்தப்படும். தேவையான இடங்களில் மட்டுமே கம்பிக் கூண்டுகள் அமைக்கப்படும். இந்த முறை அறைகளை முழுமையாக கம்பிக் கூண்டுகளால் அடைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நபா்களை தவிா்த்து வேறு யாரும் நுழைய இயலாது. மேலும், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிற்கவோ, அமரவோ வேண்டும். ஏனெனில், ஒருமுறை நுழைந்துவிட்டால் தடுப்பு கூண்டுகளை பூட்டி விடுவா். தேவையெனில் மட்டுமே திறக்கப்படும். வாக்கும் எண்ணும் மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா், போலீஸாா் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூடுதல் கண்காணிப்புடன் பணியாற்ற அறிவுறுத்தினாா்
அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்களுக்கு சிறை