டெல்லியை குளிர்வித்த மழை.. மக்கள் மகிழ்ச்சி

நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை அதிகரித்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். டெல்லியில் வெப்ப அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. வெப்ப அலை மற்றும் வெப்பம் தொடர்புடைய பாதிப்புகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் இன்று(ஜூன் 21) பிற்பகல் லேசான மழை பெய்தது. வெப்ப அலைக்கு சற்று ஓய்வு கொடுக்கும் வகையில் இந்த மழை அமைந்தது.

தொடர்புடைய செய்தி