மெக்சிகோவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 இளம் வயது சிறார்கள் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஜூன் 20) இரவு உணவு வாங்க அவர்களின் தாய் வெளியே சென்ற நிலையில் தந்தையும் வேலை நிமித்தமாக சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்தது. இதில் கரும்புகையை சுவாசித்ததால் சிறார்கள் நால்வரும் இறந்தனர். இது உடற்கூறு ஆய்விலும் தெரிய வந்ததுள்ளது. இந்த சோக சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.