கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. சேலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதால், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் உறவினர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.