கொளுத்தும் வெயிலில் அமரவைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள்

உத்தரப் பிரதேச மாநிலம், சித்தார்த் நகரில் ஷியாம்ராஜி உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கட்டணம் கட்டாமல் நிலுவையில் வைத்திருந்ததால், அவர்களை அப்பள்ளியின் முதல்வர் கொளுத்தும் வெயிலில் அமர்த்தியுள்ளார். இந்த விஷயம் மாவட்ட ஆய்வாளர் கவனத்திற்கு சென்றது. இதுகுறித்து பேசிய அவர், “இப்படி செய்வது மிகவும் வெட்கக்கேடானது. இதுகுறித்த தகுந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி