ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.. ஈபிஎஸ் கண்டனம்

50பார்த்தது
ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை..  ஈபிஎஸ் கண்டனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “ஆசிரியர் பெருமக்கள் , எதிர்கால சந்ததியினரை உருவாக்கக்கூடிய செம்மையான பணியினை செய்துவிட்டு, அதற்கான ஊதியத்தை வாங்காமல் மாதக் கடைசியில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்த திமுக அரசு, மத்திய அரசு நிதி வரவில்லை என்ற காரணம் கூறி ஆசிரியர்களுக்கு சென்ற மாதத்திற்கான சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது” என்றார்.

தொடர்புடைய செய்தி