பிரியாணி பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி (வீடியோ)

பக்கெட் பிரியாணி பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளனர். அதாவது சுடச்சுட பிரியாணியை பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் அடைத்து வைத்து வாங்கி வந்து உண்பது மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ளனர். சூடாக இருப்பதால் பிரியாணி வழங்கப்படும் பக்கெட்டுகளில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் உருகி உணவில் கலந்துவிடும் அதனை உண்பது விஷத்திற்கு சமம் என கூறியுள்ளனர். பிளாஸ்டிக்கில் உள்ள டாக்சின் என்ற ரசாயனம் உணவில் கலப்பதால் வயிற்றுக் கோளாறு, பசியின்மை, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி