அதிக வெப்பத்தால் 6 ஊர்க்காவல் படை வீரர்கள் உயிரிழப்பு

60பார்த்தது
அதிக வெப்பத்தால் 6 ஊர்க்காவல் படை வீரர்கள் உயிரிழப்பு
உத்தர பிரதேசம் மிர்ஷாபூரில் அதிக வெப்பத்தால் தேர்தல் பணி பாதுகாப்பில் இருந்த 6 ஊர்க்காவல் படையினர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த 23 பேரில் அதிக வெப்பத்தால் 6 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக வெப்பத்தால் உயிரிழந்த 6 பாதுகாப்பு வீரர்களுக்கும் அதிக காய்ச்சல் இருந்ததாகவும் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி