மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்தால், நரேந்திர மோடிக்குப் பிறகு ராகுல் காந்தி தான் நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர், "தேர்தலுக்கு முன் இரண்டு 'பாரத் நீதி யாத்திரை'-யை வழிநடத்தியவர் ராகுல் காந்தி. யாத்திரையின்போது விரிவான பிரச்சாரம் செய்தவர். பிரதமர் மோடியை நேரடியாகத் தாக்கியவர் ராகுல் காந்தி. அவரே உயர் பதவிக்கான பொறுத்தமான தேர்வு. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.