ரெமல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி

83பார்த்தது
ரெமல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி
ரெமல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், துரதிருஷ்டவசமாக, அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ரெமல் புயலுக்குப் பிறகு இயற்கை பேரழிவுகளைச் சந்தித்துள்ளன. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அங்கு பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளது. மாநிலங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் செய்ய மத்திய அரசு உறுதியளித்துள்ளது மற்றும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி