கணவரின் இறுதி சடங்கில் குழந்தை பெற்ற பெண்

54பார்த்தது
கணவரின் இறுதி சடங்கில் குழந்தை பெற்ற பெண்
விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சாரதி. இவரது மனைவி சத்தியபிரியா. இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் சமீபத்தில் சத்தியபிரியா கர்ப்பமானார். மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் 10 ஆண்டுகள் கழித்து பிறக்கப்போகும் குழந்தையை பார்க்காமலேயே சாரதி உயிரிழந்துள்ளார். இரும்பு கம்பியை தூக்கி செல்லும்போது அது மின்கம்பியில் உரசியதில் ஷாக் அடித்து உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் கதறி அழுத சத்தியபிரியாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் இந்த நேரத்தில் குழந்தையின் தந்தை இல்லாதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி