சாவர்க்கர் குறித்து அவதூறு - ராகுல் காந்திக்கு சம்மன்

81பார்த்தது
சாவர்க்கர் குறித்து அவதூறு - ராகுல் காந்திக்கு சம்மன்
சாவர்க்கர் குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்திக்கு சம்மன்‌ அனுப்பப்பட்டுள்ளது. கடந்தாண்டு மே 5ம் தேதி சாவர்க்கர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ராகுல் காந்தி பேசியதாக, சாவர்க்கரின் பேரன் சாத்யகி சாவர்க்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஆகஸ்ட் 19ஆம் தேதி நேரில் ஆஜராக புனே மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததாக ராகுல் காந்தி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி