முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி புதுக்கோட்டையில் பிரச்சாரம்

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவிற்கு புதுக்கோட்டை மறவப்பட்டியில் முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் பேசுகையில்,

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக 520 வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி விட்டார். ஏனென்றால் ஒன்றைக் கூட உருப்படியாக நிறைவேற்றவில்லை. இதில் நூறு சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என பொய்யாக சொல்கிறார்.

அதிமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட திட்டமான தாலிக்கு தங்கம் திருமண உதவித்தொகை சுய உதவி குழு கடன் பெண்களுக்கு ஆடு, மாடு வழங்கும் திட்டம் என அனைத்து திட்டங்களையும் திமுக முடக்கிவிட்டது. எனவே இந்த திட்டம் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால் அதிமுக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தீவிர பிரச்சாரம் செய்தார்.

இந்தக் கூட்டத்தினை புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் மறவபட்டி மணி சிறப்பாக செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி