விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் நேற்று (ஏப்ரல் 15) அவனியாபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “எனது மகன் விஜய பிரபாகரனின் வெற்றிக்கு பிறகு அவருக்கு திருமணம் நடந்தால், இந்த விருதுநகர் தொகுதி மக்களின் ஆசிர்வாதத்தில் தான் நடக்கும். உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற விஜய பிரபாகரன் நிச்சயம் பாடுபடுவார்” என்றார்.