மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் தக்வாலே. ஹோட்டல் தொழிலாளியான இவருக்கு 12 வயதில் ஒரு மகனும், 8, 7 வயதில் மகள்களும் இருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது 3 பிள்ளைகளையும் ஆள்நடமாட்டம் இல்லாத கிணற்றில் வீசி கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த குற்றவாளி சந்தோஷ் தக்வாலேவை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.