பட்டியலின மக்களைத் தரக்குறைவாக பேசிய நடிகர் கார்த்திக் குமார் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து, தேசிய பட்டியலின ஆணையத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி இயக்குநர் எஸ்.ரவிவர்மனிடம் கொடுத்துள்ள மனுவில், திரைப்பட நடிகர் கார்த்திக் குமார், தனது முன்னாள் மனைவியுடன் தொலைபேசியில் பேசியதாக வெளியாகியுள்ள உரையாடலில், பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார். இது பட்டியலின சமூகத்தினரை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இதன் அடிப்படையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.