முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை

70பார்த்தது
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை
பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பேலா திரிவேதி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ராஜேஷ் தாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் செய்த நிலையில் ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி