நீட் போராட்டம் - பாஜக அலுவலகத்தை பூட்டிய காங்கிரசார்

நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், ஹரியானாவில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பாஜக அலுவலகத்துக்கு பூட்டு போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி