செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அருகே இன்று (மே 15) பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சாலையின் ஓரமாக கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற திருநங்கை ஒருவர் குழந்தையை மீட்டு அவசர ஊரதிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். தொடர்ந்து, இச்சம்வம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பச்சிளம் குழந்தையை சாலையில் வீசியவர்களை தீவிர தேடி வருகின்றனர்.
நன்றி: பாலிமர்