பேருந்து விபத்து - 6 பேர் பலிக்கான காரணம் அம்பலம்

83பார்த்தது
பேருந்து விபத்து - 6 பேர் பலிக்கான காரணம் அம்பலம்
ஆந்திராவில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று கடந்த 13ஆம் தேதி ஐதராபாத்திற்கு சென்றது. அங்கு, தங்களது வாக்குகளை செலுத்திவிட்டு அதே பேருந்தில் மீண்டும் ஆந்திரா திரும்பினர். அப்போது சிலகலூரிப்பேட்டை வரிபாலம் டோங்கா என்ற இடத்தில் டிப்பர் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்த விசாரணையில், தற்போது இரண்டு ஓட்டுநர்களும் மது போதையில் பேருந்தை ஓட்டியது தெரியவந்துள்ளது.