சிமெண்ட் காரைகள் விழுந்து ஒரு வயது குழந்தை பலி

82பார்த்தது
சிமெண்ட் காரைகள் விழுந்து ஒரு வயது குழந்தை பலி
சென்னை அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவைச் சேர்ந்த பெண் சூர்யா (20). இவர், தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் வீட்டில் வெளியே நின்றுள்ளார். அப்போது, வீட்டின் போர்டிகோவில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதில், ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. தொடர்ந்து, படுகாயமடைந்த தாய் சூர்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி