கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், "என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அத்தனையையும் கண்காணித்து வருகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்" என கூறியுள்ளார்.