“எல்லாம் மாறும்” என்ற நம்பிக்கையில் காலம் தள்ளும் அகதிகள்

81பார்த்தது
“எல்லாம் மாறும்” என்ற நம்பிக்கையில் காலம் தள்ளும் அகதிகள்
இன்று(ஜூன் 20) ‘உலக அகதிகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு, பஞ்சம் பிழைப்பதற்காக பல நாடுகளில் இடம் தேடி அலைந்து அகதிகள் என்கிற முத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பலரின் அவலம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பீரங்கி மற்றும் துப்பாக்கித் தோட்டாக்களின் இரைச்சலில் இருந்து தப்பித்து, நலம் நாடி வந்தவர்களை பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். போரில் தப்பி பிழைத்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு அகதிகளும் என்றாவது ஒருநாள் விடியும் என்கிற நம்பிக்கையில் காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி