உடற்கூறாய்வு செய்யப்பட்ட உடல் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்

76பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்ததில் இதுவரை 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இன்று( ஜூன் 20) கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. இதனிடையே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி