இன்று (மே 18) உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி இன்றளவும் மனித சமூகத்தை அச்சுறுத்தி வரும் வைரஸ் தொற்றாக இருந்து வருகிறது. தவறான பாலியல் உறவு அல்லது பாதுகாப்பற்ற உடலுறவால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எய்ட்ஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் மற்றும் அவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, கத்தி வழியாகவும், பாலூட்டும் தாய்மார்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மூலம் குழந்தைகளுக்கும் பரவுகிறது.