மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றி உறுதியற்றது எனக்கருதி இந்திய பங்குச்சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர். பங்குச்சந்தையின் நிலையற்ற தன்மையின் அளவீடான VIX இந்த மாதத்தில் 20.6 ஆக உயர்ந்துள்ளது. இது தேர்தலின் தொடக்கத்தில் இருந்ததை விட 47 சதவீதம் அதிகரித்துள்ளது. நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் குறைந்த வாக்குப்பதிவுகள் ஆளும் கட்சிக்கு ஆதரவான அலை இல்லை என்பதை முதலீட்டாளர்கள் உணர்ந்து தங்களது முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.