1008 கிலோ ஆட்டிறைச்சி சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம்!

62பார்த்தது
1008 கிலோ ஆட்டிறைச்சி சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இடிச்சியூரணி கிராமத்தில் ஸ்ரீ இருளப்ப சுவாமி பாதாள பேச்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பொங்கல் உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இக்கோயிலின் வைகாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்கள் சார்பில் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 51 வெள்ளாட்டு கிடாய்களை நேற்று (மே 17) நள்ளிரவில் பலியிட்டு, 1008 கிலோ ஆட்டுக்கறியை சமைத்து சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்தனர்.

தொடர்புடைய செய்தி