இந்த நிலையில், நேற்று காலை கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சத்யா சடலமாக கிடந்தார். அருகில் மாரியப்பன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பழனியும், அவரது மகன்களும் வீட்டில் இல்லாத நேரத்தில் மாரியப்பன் சத்யாவுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டுக்கு வந்த சத்யாவின் மகன்களோ, கணவனோ அவரை கொலை செய்து விட்டு கள்ளக்காதலனின் கழுத்தை அறுத்தார்களா? அல்லது மாரியப்பன் சத்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
குவைத் தீ விபத்து- முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை