புதுச்சேரி விஷவாயு தாக்குதல்- மேலும் ஒருவர் மயக்கம்!

75பார்த்தது
புதுச்சேரி விஷவாயு தாக்குதல்- மேலும் ஒருவர் மயக்கம்!
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதியில் மேலும் ஒருவர் மயக்கமடைந்தார். இதையடுத்து, மயங்கி விழுந்த புதுநகரை சேர்ந்த 38 வயது பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக பாதாள சாக்கடைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விஷவாயு தாக்குதல் எதிரொலியாக புதுநகர் பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் 17-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி