ஒடிசாவின் புதிய முதலமைச்சராக மோகன் சரண் மாஜி நேற்று புதன்கிழமை பதவியேற்றார். மோகன் கியோஞ்சர் சதார் பகுதியில் உள்ள ரெய்காலா பகுதியில் வளர்ந்தார். 1997 முதல் 2000 வரை கிராம தலைவராக இருந்த மோகன், அதே ஆண்டு பாஜக சார்பில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். 2019ல் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்ற பின், சட்டசபையில் அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோகன் சரண் கியோஞ்சார் தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார். இறுதியாக 2024ல் முதலமைச்சர் பதவியை அடைந்து நினைத்துக்கூட பார்க்காத உயரத்தை எட்டிப் பிடித்துள்ளார்.