நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேர்த் திருவிழா கொடியேற்றம்

85பார்த்தது
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆணி பெருந்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம் இன்று (ஜுன் 13) நடைபெற்றது. இன்று அதிகாலை கோவில் கொடிமரத்தில் திருவிழாவுக்கான கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் 21ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான ஆனி பெருந்தேரோட்டம் திருவிழா நடைபெற இருக்கிறது. 10 நாட்கள் நடைக்கும் திருவிழாவில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா காலை, மாலை நடைபெறும்.

தொடர்புடைய செய்தி