குவைத் தீ விபத்து- முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

74பார்த்தது
குவைத் தீ விபத்து- முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
குவைத் தீ விபத்து தொடர்பாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், இது தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை எடுத்து வரும் நடவடிக்கைள் குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் முதல்வர் கேட்டறிகிறார். இந்த கோர விபத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி