இதனை தொடர்ந்து தேவர் சிலை , பேருந்து நிலையம், நகரின் முக்கிய வீதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்குகளை சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காந்தி மார்க்கெட் வழியாக பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய வேட்பாளர் முகமது முபாரக்: -
அதிமுக ஆட்சியின்போது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை திமுக நிறுத்தி உள்ளதாகவும், அம்மா ஸ்கூட்டரை திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதாகவும் , விண்ணை முட்டும் அளவிற்கு விஷமாக விலைவாசி ஏறி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதில் முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், நகர செயலாளர் முருகாணந்தம், எம்ஜிஆர் மன்ற மாநில இணைச் செயலாளர் ரவி மனோகரன் இளைஞரணி மாவட்ட செயலாளர் அண்ணன் அன்வர்தீன் , உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் எஸ் டி பி ஐ , தேமுதிக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.