நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் இயல்பை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஜூன் 5 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 106 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் ஜூன் 8 ஆம் தேதிக்குள் மழை வர வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.