நடனம் ஆடிக்கொண்டே வந்து வேட்புமனு தாக்கல்

திண்டுக்கல்லில் எல்லோருமே திருடங்க தான் என்ற பாடலை ஒலிக்கச் செய்தபடி நடனம் ஆடிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்.

மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு கட்சியின் வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவை வழங்கி வேட்பு மனு தாக்கல் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் புதன்கிழமை மதியம் 2 மணி அளவில் திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த அன்பு ரோஸ் என்ற சுயேச்சை வேட்பாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எல்லோருமே திருடங்கதான் என்ற சினிமா பாடலை ஒலிக்கச் செய்தபடி நடனமாடிக் கொண்டே வந்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேலும் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று சினிமா பாடலை ஒலிக்கச் செய்தபடி நடனமாடிக் கொண்டே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த சுயேச்சை வேட்பாளர் அன்பு ரோஸ் என்பவரது நடனம் அங்கிருந்த அனைவருக்கும் சிறிது நேரம் வேடிக்கையாக இருந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி