நீதித்துறைக்கு அச்சுறுத்தல் - 600 வழக்கறிஞர்கள் கடிதம்

77பார்த்தது
நீதித்துறைக்கு அச்சுறுத்தல் - 600 வழக்கறிஞர்கள் கடிதம்
நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக 600 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடவும் ஒரு சுயநலக் குழு முயன்று வருகிறது. அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளுடன் ஒப்பிடும் நிலைக்கு அவர்கள் நமது நீதிமன்றங்களை தள்ளுகிறார்கள். எனவே, அரசியல் மற்றும் தொழில்முறை அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காப்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி