தேர்தல் நேரத்தில் சிலிண்டர் விலையை குறைத்து நாடகம் - திருமாவளவன்

76பார்த்தது
தேர்தல் நேரத்தில் சிலிண்டர் விலையை குறைத்து நாடகம் - திருமாவளவன்
பெட்ரோல், டீசல் விலை 3 மாதத்திற்கு ஒருமுறை உயர்கிறது. தேர்தல் நேரத்தில் சற்று சிலிண்டர் விலையை குறைத்து நாடகமாடி வருகின்றார் பிரதமர் மோடி என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். விழுப்புரம் சிக்னல் பகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் பேசிய திருமாவளவன், தேர்தல் முடிந்ததும் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விடுவார்கள். நாட்டையும், அரசியல் அமைப்பையும் காப்பாற்றத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சியில் 28 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் விசிகவும் உள்ளதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

தொடர்புடைய செய்தி