மதுவிலக்கு போலீசாரால் 191 மது பாட்டில்கள் பறிமுதல்

68பார்த்தது
மதுவிலக்கு போலீசாரால் 191 மது பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல் அய்யலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதிகளில் மது விற்ற காளிமுத்து (35), சுப்பிரமணி (44) ஜெயா (48), ரவீந்திரன் (65), திருமுருகன் (29), கார்த்திக் (42), பழனிச்சாமி (70), ராஜ்குமார் (32), ஜெயா (48) உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 191 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி