நாயை அடித்துக் கொன்ற இந்து முன்னணி பிரமுகர் கைது

5110பார்த்தது
திண்டுக்கல் வடமதுரை அருகே நாயை அடித்துக் கொன்ற இந்து முன்னணி பிரமுகர் கைது.

திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள பால் கேணி மேட்டுப்பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி பாண்டியம்மாள் வயது 43. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை தனது பாதுகாப்பிற்காகவும் செல்ல பிராணியாகவும் வளர்த்து வந்தார். அவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வந்த ஈஸ்வரன் என்பவருக்கும், பாண்டியம்மாளுக்கும் நாய் பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. புதன்கிழமை மதியம் ஒரு மணி அளவில் வீட்டில் இருந்த நாய் மாயமானது.

பல இடங்களில் தேடிப் பார்த்த பாண்டியம்மாள் தனது நாய் அருகில் இருந்த குளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஈஸ்வரன் தான் நாயை அடித்துக்கொண்டு குளத்தில் வீசியது தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது ஈஸ்வரன் இந்து முன்னணி கட்சியின் நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி