பழனியில் இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தம்

51பார்த்தது
பழனியில் இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தம்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் படி பாதை , மின் இழுவை ரயில், ரோப்கார் சேவை மூலமாக மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் ரோப்கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும் , ஆண்டிற்கு ஒரு மாதமும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் , இந்நிலையில் ரோப்கார் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தப்பட்டு புதிய கம்பி வடம் பராமரிப்பு மேல் ரோப்கார் நிலையத்தில் சாப்ட்டுகள், மற்றும் பெட்டிகளுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும், மேலும் பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில் , பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி