மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி

1021பார்த்தது
மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதே பகுதியை சேர்ந்த விமல் குமார் (26) என்பவர் மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்பெண் கூச்சலிட்டதால் விமல் குமார் அங்கிருந்து தப்பியோடினார். இதனை தொடர்ந்து பெண்ணின் தாயார் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விமல் குமாரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி