அசாம் மாநிலத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) கட்சியைச் சேர்ந்த முக்கியப் புள்ளி, பணக்குவியலில் படுத்துத் தூங்கியுள்ளது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அந்த நபர், 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் சூழ படுத்துகொண்டு தனது உடலின் மீதும் பணத்தைப் பரப்பி வைத்து தூங்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அவரின் செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.