டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் ? - கெஜ்ரிவால்

74பார்த்தது
டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் ? - கெஜ்ரிவால்
அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு இன்று(மார்ச்28) டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சதியை முறியடிக்கும் வகையில் டெல்லி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை சிக்க வைக்க வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது அமலாக்கத்துறை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி