19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெயில் தணிந்து தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிக்குள் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் 12 முதல் 20 செ.மீ., வரை கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாமக்கல், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி