விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே இன்று (ஜூன் 22) பள்ளி சிறுவர்கள் பம்ப்செட்டில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிறுவர்கள் மீது மின் கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அவர்கள் மிது மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில், சப்தகிரி (11) மற்றும் லோகேஷ் (8) ஆகிய இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிறுவர்களது சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: நியூஸ் தமிழ் 24*7