வைரல் - Viral Tamil News

குடித்துவிட்டு தாலிகட்ட வந்த மணமகன்

குடித்துவிட்டு தாலிகட்ட வந்த மணமகன்

திருமணத்திற்கு மணமகன் குடித்துவிட்டு தாமதமாக வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் பீகார் மாநிலம் கதிஹாரில் நடந்துள்ளது. திருமண மண்டபத்திற்கு வரும்போது மணமகன் மஞ்சித் மது அருந்தியதாக கூறிய மணப்பெண் மனிஷா, திருமணத்திற்கு செலவான ரூ.4 லட்சத்தை தனது குடும்பத்தினருக்கு தர வேண்டும் என கூறியுள்ளார். பணத்தை செலுத்தும் வரை மஞ்சித் மற்றும் அவரது பெற்றோர் வெளியே விடமுடியாது என ஒரு அறையில் அவர்களை பூட்டி வைத்துள்ளார். பின்னர் மணமகனின் உறவினர்கள் பணத்தை கொடுத்துவிட்டு அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

ad