-Prabhas

நாளை காலை 8.30 மணி வரை ரெட் அலர்ட்

நாளை காலை 8.30 மணி வரை ரெட் அலர்ட்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கையால் நான்கு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.