Thatstamil News in Tamil | Online Tamil News Today - Lokal Tamil

திமுகவினர் நீர் மோர் பந்தலுக்கு தீ வைப்பு

திமுகவினர் நீர் மோர் பந்தலுக்கு தீ வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பந்தல் தீப்பிடித்து எரிவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தகவல் அளித்தனர். மர்ம நபர்கள் சிலர் இந்த பந்தலுக்கு தீ வைத்து சென்றிருக்கலாம் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, திமுக நிர்வாகி ராமநாதன், பழனி உள்ளிட்டோர் சார்பில் ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.