சத்தீஸ்கரில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொன்ற நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பலோதாபஜார் மாவட்டத்தில் நடந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் 5 பேர் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்பட்ட காரணங்களே காரணம் என நம்பப்படுகிறது.