கர்நாடக மாநிலத்தின் துங்கா ஆற்றுப்பாலம் அருகே நேற்று (ஏப்ரல் 13) காலை ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த இளைஞர் ஒருவர் திடீரென ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீஸ், இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த இளைஞர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.